மதுரை புறநகரில் சிபிஎம் பிரச்சார இயக்கம்
கிராமப்புற வேலைஉறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மாதாந்திர மின் கணக்கீடு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாநில அரசை வலியுறுத்தியும் மதுரை புறநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் வெள்ளியன்று நான்கு பகுதிகளில் துவங்கியது. ஏராளமான கிராமங்களில் மக்களை சந்தித்த இப்பிரச்சாரப் பயணங்களை கப்பலூரில் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், வண்டியூரில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மஞ்சம்பட்டியில் மாநிலக்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, சின்னக்கட்டளை கிராமத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவிச்சந்திரன், வி.பி.முருகன், வி.சமயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.