பொன்னமராவதி வாரச்சந்தை வளாகத்தை துணை முதல்வர் காணொலியில் திறப்பு
பொன்னமராவதி, ஜுன் 13- சென்னையில் அமைச்சர் கேஎன்.நேரு தலைமையில் நடைபெற்ற விழாவில் பொன்னமராவதியில் 2.17 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை வளாகத்தை காணொலி வாயிலாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு பொன்னமராவதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.