திருநீலக்குடி கிராமப்புற காவல் நிலைய 12 ஆம் ஆண்டு தொடக்க விழா
கும்பகோணம், ஜுன் 13- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருநீலக்குடி கிராமப்புற காவல் நிலையம் 11 ஆண்டுகள் முடிந்து 12 ஆம் ஆண்டு தொடக்க விழா காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர்கள் சுகன்யா, முருகானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்நிலையம் முழுவதும் வண்ண நிறங்களில் வர்ணம் பூசி வண்ண மின் விளக்குகள், தோரணம் தொங்கவிட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஆண்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்திருந்தனர். இந்த விழாவில் மும்மதத்தினரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி அனைத்து காவலர்களுக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். திருவிடைமருதூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.]
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
அறந்தாங்கி, ஜுன் 13- புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரி கோவிந்தம்மாள் தலைமையில் தொடங்கியது. அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கருத்தாளர்களாக ஆசிரியர்கள் ஷாலினி, மோகன்தாஸ் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை சசிகலா, ஷியாமளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.