tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிறப்பு கண்காணிப்பு குழு  

தஞ்​சாவூர்: தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர்  கோவி.செழியன், தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் கூறு கையில், “கல்​லூரி​களில் ராகிங் கொடுமை​யை தடுக்க கல்​லூரி முதல்​வர், துறைத் தலை​வர்​கள், மாணவப் பிர​தி​நி ​தி​கள், பெற்​றோர் சங்க நிர்​வாகி​கள் என 7 பேர் கொண்ட சிறப்பு கண்​காணிப்பு குழு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்​தக்  குழு​வினர் மாணவர்​கள் கல்​லூரிக்கு வரு​வது முதல், கல்லூரி முடிந்து வீட்​டுக்குச் செல்​வது வரை கண்​காணிப்​பர்.  மேலும், கண்​காணிப்பு கேமரா மூல​மும் கண்​காணிக்கப் படும். பள்​ளி, கல்​லூரி​களில் ராகிங் குற்​றம் நடை​பெறாத வகை​யில், நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளது” என்றார்.

ஜூன் 27 இறுதி விசாரணை

சென்னை: தேச துரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச் செய லாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின்  இறுதி விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு சென்னை  உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

‘அண்ணாமலைக்கு காழ்ப்புணர்ச்சி’

சென்னை: 2014, 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரை யின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதி களில் 50 கூட நிறைவேற்றப்படவில்லை என ‘கோணி  புளுகன்’ கோயபல்சை மிஞ்சும் வகையில், காழ்ப்புணர்ச்சியு டன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து கூறியிருக்கிறார். பதவி போன பிறகு காணாமல் போய்விட்டதாக யாரும் கருதக் கூடாது என்பதற்காக தனது  இருப்பை காட்டிக் கொள்வதற்கு இத்தகைய அவதூறு கருத்துகளை கூறி வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்து உள்ளார்.

திருமாவளவன் சாடல்

திருச்சி: விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யு மான தொல்.திருமாவளவன் திருச்சியில் வெள்ளியன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒன்றிய அரசு எந்த மதத்தின் சொத்து நிர்வாகத்திலும் தலையிடாத போது  இஸ்லாமியர்களின் சொத்து நிர்வாகத்தில் மட்டும் வெளிப படையாக தலையீடு செய்வது அரசமைப்புச் சட்டம், மதச் சார்பின்மைக்கு எதிரானது. மக்களை மதத்தின் பெயரால்  பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக் கிறார் பிரதமர் மோடி. மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துவதற்காக முருகவேல் யாத்திரை, முருக பக்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துகின்றனர்” என சாடினார்.

விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து

இராமநாதபுரம்: பாம்பனில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர். காற்றின் வேகம் காரணமாக மீனவரின் கட்டுப்பாட்டை இழந்து விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் சக மீன வர்கள் ஈடுபட்டனர்.

வணிக வளாகமாக மாற்ற திட்டம்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் தொடங்கப் பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இதன் பிறகு, இந்திய விமான நிலைய ஆணைய (ஏஏஐ)  அதிகாரிகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தை  மீண்டும் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி னர். இந்த பழைய முனையம் குறித்து ஏஏஐக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், பழைய  முனையத்தை ஒரு ஹோட்டல் மற்றும் வணிக வளாகமாக மாற்றுவதற்கான விருப்பம் முன்னணி யில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இடையீட்டு மனு

மதுரை: மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக  பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு  வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை  வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி  பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்  இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.'

நீர் திறப்பு குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  விநாடிக்கு 10,000 கன  அடியில் இருந்து, 6000  கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது. டெல்டா பகுதி யில் பரவலான மழைப் பொழிவு இருப்பதால் பாச னத்திற்கு தண்ணீர் தேவை சற்று குறைவாக  உள்ளது. இதனால், நீர்  திறப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் விளக் கம் அளித்தனர்.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீர மைப்பு பணியால், தேஜஸ், மன்னை, குருவா யூர் விரைவு ரயில்கள் உள்பட 5 ரயில்கள் தாம்ப ரத்தில் இருந்து இயக்கப்ப டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அபுதாபிக்கு விமானம்

மதுரை: மதுரையில் இருந்து வெள்ளியன்று முதல் அபுதாபிக்கு இண் டிகோ விமான சேவை தொடங்கப்பட்டது. மதுரை யில் இருந்து அபுதாபிக்கு  திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விமான சேவை இயக்கப்படும். மதுரையில் இருந்து துபாய்,  இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலை யில், தற்போது அபுதாபிக் கும் இயக்கப்படுகிறது.