கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் குழந்தை தொழிலாளர் அகற்ற உறுதிமொழி ஏற்பு
கும்பகோணம், ஜுன் 12- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் தலைமையகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி பொதுமேலாளர் என். முத்துகுமரசாமி தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். இந்திய அரசமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும். அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என பொதுமேலாளர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், முதுநிலை துணைமேலாளர் ராஜேந்திரன், துணைமேலாளர் கார்த்திகேயன், உதவி மேலாளர்கள் ராஜேஷ், முருகன், இளங்கோவன், முகமதுமுஸ்தபா, கோபாலகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், ஓட்டுனர்கள் நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள், பாதுகாவலர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.