tamilnadu

img

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்க  இடம் ஒதுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 12-  திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: எங்கள் தொழிற்சங்கத்தில் சுமார் 2000 உறுப்பினர்கள் டாக்ஸி மற்றும் வேன் ஓட்டும் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது புதிதாக திறக்கப்படும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் வாழ்வாதாரம் காக்க வேண்டி, டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள எங்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த வேன் ஓட்டுநர்கள், தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் போக்குவரத்து காவல்துறையினர் ஆன்லைன் அபராதம் விதித்து விடுகின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு திருவானைக்காவல் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் அருகே வேன் ஸ்டாண்ட் அமைப்பதற்கு இடம் உள்ளது. அந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கி தருமாறு நான் சார்ந்துள்ள சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  ஏற்கனவே, மத்திய பேருந்து நிலையத்தில் இடம் விரிவாக்கம் இன்றி எங்களது டாக்ஸி ஸ்டாண்டு கிளை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எங்களது வேண்டுகோளை ஏற்று உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனதில் கூறியிருந்தார்.  மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்தபோது சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர் ஆண்டனி சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ராஜ்குமார் மற்றும் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.