விருதுநகர் மாவட்டம் வடகரையில், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வடகரை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (வயது 54) மற்றும் தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பையா (வயது 37) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன் (வயது 55), முருகன் (வயது 40), மாரியம்மாள் (வயது 40) மற்றும் பேச்சியம்மாள் (வயது 38) ஆகிய நான்கு பேரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.