tamilnadu

img

விரைவில் நிரப்பப்படும் கிராம உதவியாளர் பணியிடங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை,ஜூன் 11-கிராம உதவியாளர் பணி விரைவில் நிரப்பப்படவுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இந்நிலையில் 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.