விருதுநகர் மாவட்டம் வடகரையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.