கனமழை எச்சரிக்கை காரணமாக 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு அருகே உள்ள கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழையை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி இந்த 7 மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.