தட்கல் டிக்கெட் (Tatkal) முன்பதிவில் ஆதார் உறுதிபடுத்துதல் கட்டாயம் என்பது உள்ளிட்ட புதிய மாற்றங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். இந்திய ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பின்படி,
2025 ஜூலை 1 முதல், ஐஆர்சிடிசி இணையதளத்திலும், மொபைல் செயலியிலும், ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ள முடியும்.
2025 ஜூலை 15 முதல், ஆதாருடன் ஓடிபி அடிப்படையிலான உறுதிப்பாடும் கட்டாயமாகும். அதிகாரபூர்வ பிஆர்எஸ் கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள், பயனர்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் ஓடிபியை உறுதிப்படுத்திய பின்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் டிக்கெட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஏசி வகுப்புகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
ஏ.சி அல்லாத சாதாரண வகுப்புகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.