புள்ளிவிபர மோசடிகள்!
நாட்டின் வளர்ச்சி, நலத்திட்டங்கள், வேலை வாய்ப்பு, வறுமை குறைப்பு போன்ற துறைகளில் உண்மையான தரவுகள் அரசின் மீதான பொது நம்பிக்கைக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய மோடி அரசு வழங்கிய புள்ளிவிபரங்கள் பெரும்பாலும் தவறானவை, மிகைப்படுத்தப்பட்டவை அல்லது மறைக்கப்பட்டவை என்பது அம்பலமாகி வருகிறது.
ஒன்றிய சுகாதாரத்துறை 2021ஆம் ஆண்டுக் கான கோவிட் மரண எண்ணிக்கையை 3,33,333 (3.3 லட்சம்) என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், உள்துறை மற்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (SRS மற்றும் CRS) வெளியிட்ட புள்ளி விபரங்கள் 2021ஆம் ஆண்டு 1.02 கோடி மரணங்கள் பதிவாகியுள்ளன என்பதை காட்டுகின்றன. 2020 ஆம் ஆண்டு 81.2 லட்சம் மரணங்கள், 2022ஆம் ஆண்டு 86.5 லட்சம் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன் பொருள், 2021ஆம் ஆண்டில் கோவிட் காரணமாக கூடுதலாக 15 லட்சம் மரணங்கள் ஏற் பட்டிருக்கிறது. அதாவது, கோவிட் மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டதைவிட 6 மடங்கு அதிகமாகும். குறிப்பாக குஜராத், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகாரப்பூர்வ கோவிட் மரண எண்ணிக்கையைவிட அதிக மான மரணங்கள் பதிவாகியுள்ளன.
உத்தரப்பிரதேச அரசு மகாகும்பமேளாவில் 37 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது. ஆனால் பிபிசி மேற்கொண்ட புலனாய்வில் 82 பேர் உயிரிழந் துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த வர்களுக்கு அரசு ரூ. 25 லட்சம் வழங்கியதாக அறிவித்தாலும், பெரும்பாலான குடும்பங்களுக்கு அந்த தொகை வழங்கப்படவில்லை என்றும், அதில் ஊழல் நடந்துள்ளதையும் புலனாய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது.
மோடி அரசு வேலையின்மை புள்ளிவிப ரங்களை 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை. காரணம் ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்குவோம் என தேர்தலில் வாக்குறுதி அளித் தது. ஆனால் வழங்கவில்லை. இது மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களைக் கூட வெளியிட அனுமதிக்க வில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய புள்ளி யியல் ஆணையத்தின் துணைத்தலைவர் பி.சி. மோஹனன் மற்றும் ஜே.வி. மீனாட்சி ஆகியோர் பதவியிலிருந்து ஏற்கனவே விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் தோல்விகளை வெளிப் படுத்தும் எந்த தரவுகளையும் வெளியிட மறுப்ப தோடு, அது குறித்த தரவுகள் இல்லை என வெட்க மின்றிக் கூறும் அரசாகத்தான் மோடி அரசு இருந்து வருகிறது. அரசின் புள்ளிவிபரங்கள் வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல - அது நாட்டின் உண்மை நிலையை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி. தரவுகளில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறை இல்லை என்றால் அங்கு நேர்மை இல்லை என்று அர்த்தம்