காரைக்கால்,பிப்.17- இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி காரைக்காலில் மீனவர்கள் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைக் கண்டித்து பலமுறை மீனவர்கள் பலமுறை அரசிடம் முறையிட்டும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இலங்கை அரசைக் கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்து காரைக்கால் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.