பொதுத் தேர்வு காலத்தில் மின்தடை கூடாது!
மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவ தையொட்டி, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறி யாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் உற்பத்தி நிலை யங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழக மின்வாரியம் வீடு கள், கடைகள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு மின் கம்பம், கேபிள், மின்விநியோக பெட்டி, மின்மாற்றி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் விநியோகம் செய்கிறது. இவற்றில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் எப்போதும் வெப்பத்துடன் இருக்கும். எனவே, மின் சாதனங்களில் பழுது ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தேர்வு சமயத்தில் மின்தடை ஏற்படு வதைத் தவிர்க்கும் வகை யில், வரும் ஏப்ரல் மாதம் வரை மின்சாதன பராமரிப்பு பணிகளுக்கு மின் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், அடுத்த இரு மாதங் களுக்கு பகலில் மின்தடை செய்யக்கூடாது. மிகவும் அவசிய தேவை என்றால், தலைமைப் பொறியாளர் களிடம் முன்கூட்டியே அனு மதி பெற்று பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொறியா ளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது