அடுத்துள்ள கணபதி செட்டிக்குளத்தில் நடைபெற்றது. பிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிளைத் தலைவர் கோபால் தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநிலச் செயலாளர் சீனிவாசன் பெயர் பலகையை திறந்து வைத்தார். முன்னதாக தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி தாஸ் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.பொதுச் செயலாளர் மதிவாணன் அடையாள அட்டையை வழங்கினார். சிஐடியு மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,ராஜேஷ்குமார்,மணிபாலன், தினேஷ்குமார், சத்தியமுர்த்தி மற்றும் கிளை நிர்வாகிகள் உதயகுமார். உத்தரவேல் உட்பட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.