tamilnadu

img

நெரிசல் ஏற்பட்டால் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி இலவசப் பயணத்திற்கு அனுமதிக்கலாம்

சென்னை, அக்.27- தீபாவளிப் பண்டிகையின்போது போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்து இலவசப் பய ணத்தை அனுமதிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளியைக் கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர் களுக்குச் செல்வோரின் வசதிக்காக மூன்று நாள்களுக்கு மொத்தம் 11 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் போன்றவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை யொட்டி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர் செல்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் சுங்கச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதும் அதனால் பயணிகள் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதும் வழக்கம். எனவே, பண்டிகையின்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனு மதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தமி ழக அரசும் பேச்சுவார்த்தை நடத்தி யது. இதையடுத்து, தேசிய நெடுஞ் சாலை மண்டலத் தலைமையகத் திலிருந்து சுங்கச்சாவடி மேலாளர் கள் உள்ளிட்டோருக்கு அறி வுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள தாகக் கூறப்பட்டது.