districts

img

கள்ளக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார சீர்கேடு!

கள்ளக்குறிச்சி, அக் 27- கள்ளக்குறிச்சி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் அமைந்து உள்ள அரசு மாவட்ட மருத்துவ மனையில் செயல்பட்டு வருகிறது.  இங்கு  நாள் ஒன்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர். அங்கு குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை. கழிவறைகள் அசுத்தமாகவும் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்குகூட இருக்கைகள் இல்லை. ஆகையால் கர்ப்பிணி பெண்களின் சிரமத்தை போக்க மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.