tamilnadu

img

கடலோர மாவட்ட கடற்கரைகளில் மரப்பாதை

சென்னை,அக்.27- நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர  மாவட்டங்களில் உள்ள கடற்கரை களில் மரப்பாதை அமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் மரப்பாதை அமைக்கப்பட்டது. இதனால் பலர் பயன்பெற்றதால்  மெரினாவை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை நேரில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணி டிசம்பரில் முடிவுற்று, தமிழர் திருநாள் முதல் பயன்பாட்டிற்கு வரும். டிசம்பர் 3 இயக்கம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்கம் மெரினா, பெசன்ட் நகரை அடுத்து நாகை உள்ளிட்ட முக்கிய கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையிலும் மரப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை ஏற்று, மற்ற கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளிலும் மரப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.