tamilnadu

img

மேட்டூர் அணை நீர்மட்டம்: 100 அடியாக உயர்ந்தது

சேலம், அக். 23 - நடப்பாண்டில் முதல் முறையாக ஜூலை 27 அன்று மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 100 அடி யாக உயர்ந்தது. பின்னர், 60 நாட்களுக்கு பிறகு செப் டம்பர் 25 அன்று அணை யின் நீர் மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது. இந்நிலை யில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தது. இதனால், 29 நாள்களுக்கு பிறகு புத னன்று (அக்டோபர் 23) காலை நடப்பு ஆண்டில் 2- ஆவது முறையாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்துள்ளது.