districts

img

காவல் துறையை கண்டித்து அரசு ஊழியர்கள் முழக்கம்

காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப கோரி புதனன்று (அக்.23) டிஎம்எஸ் வளாகத்தில் தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், போராட்டத்தை ஆதரித்து பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டேனியல் ஜெயசிங் உள்ளிட்டோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கிண்டி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிண்டி பகுதித் தலைவர் பாரி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் முத்துகுமாரசாமி வேல், பகுதி செயலாளர் ஹரிஹரன், தொழிற் பயிற்சி அலுவலர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.