districts

கடனை செலுத்திய பின்னரும் நகையை வழங்க மறுப்பு

நாமக்கல், அக்.23- கடனை திரும்ப செலுத்திய பின்னரும், அடகு வைத்த தங்க நகையை வழங்க மறுத்த வங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் - மோகனூர் சாலை, ராக்கி நக ரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்முரு கன் (44), செல்வி (61), குமரேசன் (41) ஆகி யோர் வசித்து வருகின்றனர். கடந்த 2018 ஆம்  ஆண்டு ஜூலை மாதம், மோகனூர் சாலையி லுள்ள கனரா வங்கியில் 236 கிராம் தங்க நகை களை அடமானம் வைத்து ரூ.4,94,000யை செந்தில்முருகன் கடனாக பெற்றுள்ளார். இதைப்போலவே, 76 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.1,00,000யை செல்வி யும், 269 கிராம் நகைகளை அடமானம் வைத்து  ரூ.16,30,000யை குமரேசனும் கடனாக பெற் றுள்ளனர். மூவரும் கடனையும், வட்டியை யும் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கியில் செலுத்தியுள்ளனர். மூவ ருக்கும் வங்கியில் வேறு கடன்கள் இருப்ப தாகக்கூறி, நகைக்கடன் தொகையை செலுத் திய பின்பு, மூவருக்கும் அடமானம் வைக்கப் பட்ட நகைகளை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் தனித்தனியாக கடந்த ஜனவரி மாதத் தில் வங்கியின் மீது நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய் தனர். மூவரும் பெற்ற வேறு கடன்கள் வரா  கடன்களாக உள்ளதால், அவற்றை செலுத்தி னால் மட்டுமே அடமானம் வைத்த நகை களை திரும்ப வழங்க முடியும் என்று வங்கி யின் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு  புதனன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நகை  கடன்களை வழங்கும் போது வாடிக்கையாள ருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வேறு  கடன்கள் நிலுவையில் இருந்தால், நகை  கடனை திருப்பி செலுத்தினாலும் நகைகள்  திரும்ப வழங்கப்படாது என்ற நிபந்தனை உள்ளதா? என்பதை அறிய கடன் ஒப்பந்தத் தின் நகல்களை வங்கி தாக்கல் செய்ய வில்லை. கடன் தொகை முழுவதும் செலுத் திய பின்னரும் அடமானம் வைத்த நகை களை நுகர்வோர்களுக்கு வழங்காதது சேவை குறைபாடாகும். இதனால், வழக்கு தாக்கல் செய்தவர்கள் அடமானம் வைத்த நகைகளை 30 நாட்களுக்குள் வங்கி நிர்வா கம் வழங்க வேண்டும். மேலும், வழக்கு தாக் கல் செய்துள்ள ஒவ்வொரு நுகர்வோருக்கும் தலா ரூ.ஒரு லட்சத்தை இழப்பீடாக, கடனை திருப்பி செலுத்திய நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை, ஆண்டுக்கு 9 சத விகித வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.