districts

img

சிபிஎம் மாவட்ட மாநாட்டு நிதி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு

அவிநாசி, அக்.23 – அவிநாசியில் சிபிஎம் திருப்பூர் மாவட்ட மாநாட்டு  நிதியாக ரூ.1.50 லட்சம்  மாவட்ட மாநாடு வரவேற்பு  குழுக் கூட்டத்தில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருப்பூர் மாவட்ட  மாநாடு, அவிநாசியில், டிசம் பர் 1, 2, தேதிகளில் செந் தொண்டர் பேரணியுடன் நடைபெறுகிறது. இந்த  மாநாடு வெற்றிகரமாக நடைபெற 70-க்கும்  மேற்பட்டோர் கொண்ட வரவேற்பு குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்புக் குழுக் கூட்டம் செவ்வா யன்று அவிநாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அலுவலகத்தில் வரவேற்புக்குழுத்  தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடை பெற்றது. இதில் வரவேற்புக்குழு செயலாளர்  அ.ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் ஆர்.பழனிச் சாமி உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,  கிளைச் செயலாளர்கள், வரவேற்புக்குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜரிடம் மாவட்ட மாநாட்டு நிதியாக சுமங் கலி ரெடிமேட்ஸ் பாலு ரூ.1 லட்சம், அவிநாசி  வடக்கு கிளை ரூ.20ஆயிரம், அவிநாசிலிங் கம்பாளையம் கிளை ரூ.10 ஆயிரம், சௌடாம்பிகை நகர் கிளை ரூ.10 ஆயிரம்,  உமையஞ்செட்டிபாளையம் ரூ.5ஆயிரம், புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத்  துணைத்தலைவர் ரூ.5ஆயிரம் நிதி வழங்கப் பட்டது. கருவலூர் கிளை சார்பில் ஒரு மூட்டை  75 கிலோ அரிசி வழங்கினர். மேலும் அவிநாசி  ஒன்றியக் குழு சார்பில் 42  தீக்கதிர் சந்தா தொகையை கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் ராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜரிடம் ஒப்படைத்தார்.