districts

img

ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

சேலம், அக்.23- மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த நிலை யில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த ஞாயிறன்று வீரக்கல் கிரா மம், வீரக்கல் புதுகாலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவ ரின் மகள் சிவநந்தினி (20), மகன் சிவகிரி (10) மற்றும் முனு சாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (14) ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலை யில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்திருந்தார். அதனடிப்படையில், புதனன்று சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கி, ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.