districts

img

நியாய விலை கடைகளில் தடையின்றி பொருட்கள் வழங்க கோரிக்கை

அவிநாசி, அக்.23- நியாய விலை கடைகளில் தடையின்றி பொருட்கள் வழங்கக்கோரி வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். நியாய விலை கடைகளில், தடையின்றி உணவுப் பொருட் கள் வழங்க வேண்டும் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் முத்து செட்டிபாளையம் நியாயவிலை கடை‌ முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் ஒன்றியப்  பொருளாளர் வடிவேல், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர்  செல்வி, ஒன்றியத் தலைவர் சித்ரா, துணைத் தலைவர் தேவி,  துணைச் செயலாளர் சிவகாமி, சிபிஎம் கிளைச் செயலாளர்  பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.