tamilnadu

img

பயன்பாட்டுக்கு வரும் கொள்ளிடம் ஆற்றுக் கதவணை

பயன்பாட்டுக்கு வரும் கொள்ளிடம் ஆற்றுக் கதவணை

அமைச்சரின் அறிவிப்புக்கு கே. பாலகிருஷ்ணன் வரவேற்பு - பாராட்டு

கொள்ளிடம் ஆற் றின் குறுக்கே ரூ.  465 கோடியில் கட்டப் பட்டுள்ள கதவணை  உடனடியாக செயல்  பாட்டிற்கு வர நடவ டிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்புக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்  கையில் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டி ருப்பதாவது:

வீணாகி வந்த தண்ணீர்

கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு ஆண்  டும் அதிக அளவிலான தண்ணீர் பயன்  படுத்தப்படாமல் கடலில் சென்று கலக்கும் நிலை நீடித்து வந்தது. கொள்ளிடம் ஆற்றில்  உள்ள லோயர் அணைக்கட்டுக்கு கீழே  சுமார் 120 கிலோமீட்டர் அளவுக்கு தண் ணீரை தேக்குவதற்கான எந்த அணையும் கட்டப்படாமல் பல நூற்றாண்டுகளாக தண்ணீர் வீணாகி வந்தது.

சிபிஎம் தொடர் கோரிக்கை

இந்த நிலையில், சிதம்பரம் காட்டு மன்னார்குடி வட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சார்ந்த ஆதனூர் - குமார மங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடை யில் கதவணை கட்டி தண்ணீரை தேக்கி னால், கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ராசன் வாய்க்கால் மூலம் பல்லாயிரக்க ணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் மயி லாடுதுறை தெற்குராஜன் வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து தர முடியும் என்ற அடிப்படையில் இந்த அணை யை கட்டித் தர வேண்டும் என நீண்ட நாட்க ளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற பல அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தன.

சட்டப்பேரவையிலும் முறையீடு

கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக  சட்டமன்றப் பேரவையிலும், மேற்கண்ட அணையைக் கட்டித் தர வேண்டுமென தொடர்ந்து நான் கோரிக்கை எழுப்பிய அடிப்படையில் அப்போதைய தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களி டம் விவரமான மனுக்களை கொடுத்தும்  வற்புறுத்தினேன். இது தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்து அறிக்கையினை கேட்டுப் பெற்று சட்டமன்றத்தில் 400 கோடி ரூபாயில் இந்த அணை கட்டித் தரப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

பயன்பாட்டுக்குத் தயாரான கதவணை

அதன் பிறகு அந்த அணை கட்டு வதற்கு பல காரணங்களால் நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னணியில் அணை முழுமையாக கட்டப்  பட்டு தற்போது பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது. அணைக்குள்ளே பட்டா நிலம் வைத்தி ருக்கிற விவசாயிகள் சில பேருக்கு நஷ்ட  ஈடு வழங்கப்படாத காரணத்தால் அதை செயல்படுத்தப்படுவது தாமதமாகி வந்  துள்ள சூழ்நிலையில் இன்றைய தினம்  தமிழக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்ட மன்றக்குழு தலைவர் நாகை மாலி, நீர்வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த அணை பெரும் பகுதி கட்டி முடிக்கப்பட்டு விட்டது, இன்னும் சிறு பணிகள் பாக்கி இருக்கின்றன; இந்த  சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவதற்கு முன் னாலேயே அந்த அணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார். 

தமிழக அரசு நன்றி

அமைச்சருடைய அறிவிப்புக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் இப்பகுதி விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு பேருதவியாக அமை யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.