tamilnadu

img

வேளாண் பல்கலை.,யில் பட்டமளிப்பு விழா

வேளாண் பல்கலை.,யில் பட்டமளிப்பு விழா

கோவை வேளாண் பல்கலையில் 4,434 மாணவ, மாணவி களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கி னார். கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45 ஆவது பட்டமளிப்பு விழா செவ் வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார்.‌ சிறப்பு விருந்தினராக சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை யாற்றினார். விழாவில், தமிழக ஆளுநரும், வேளாண் பல் கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பங்கேற்று தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 4,434 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர். இதில், கல்லூரிகளில் இருந்து  1,536 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு  கல்லூரிகளில் இருந்து 2,898 மாணவர்கள் தபால் மூலமாக வும் பட்டங்களை பெற்றனர். விழாவில், பதிவாளர் தமிழ்வேந் தன், வேளாண் பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பட்ட மளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணை  வேந்தர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பதாக  இருந்தது. இந்நிலையில், தமிழக சட்டபேரவை நடந்து வரும்  நிலையில், அவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.