tamilnadu

பிரசவத்தின் போது உயிரிழந்த இரட்டை சிசுக்கள்

பிரசவத்தின் போது உயிரிழந்த இரட்டை சிசுக்கள்

மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால், பெண்ணின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி யைச் சேர்ந்தவர் அருண்குமார். இவ ரின் மனைவி நந்தினி (24) கர்ப்பம் தரித்தது முதல் தருமபுரி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் பரிசோதனை, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கர்ப்பத்தில் இரட்டை சிசுக் கள் இருப்பதாகக்கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலை யில், கடந்த வியாழனன்று நந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மகப் பேறு சிகிச்சைக்காக அந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்ட நந்தினிக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாகக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசரமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விட்டு வந்துவிட்டனர். ஆனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் நந்தினியை பரிசோதித்த மருத்து வர்கள் அவரது இரண்டு சிசுக்களும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதன் பின் அறுவை சிகிச்சை மூலம் சிசுக்கள்  எடுக்கப்பட்டு நந்தினிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை கார ணமாகவே இரு சிசுக்களும் இறந்துள் ளன. எனவே, காவல் துறையினர், மக் கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலி யுறுத்தி பெண்ணின் உறவினர்கள் திங்க ளன்று தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து தகவலறிந்த நகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களை சமாதானம் செய்து,  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.