சூலூரில் சிபிஎம் தாலுகா அலுவலகத்திற்கு அடிக்கல்
கோவை, டிச.15- சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவகத்திற் கான சூலூர் தாலுகா குழு அலுவலக கட்டடம் அமைப் பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்களன்று நடைபெற் றது. சூலூரில் தாலுகா குழு அலுவலகம் கட்டடம் கட்டப் பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தாலுகா குழு செய லாளர் சந்திரன் தலைமையில் நடைபெற் றது. இந்நிகழ்வில், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் பத்மநாபன், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, நிகழ்வில், கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கட்ட டம் அமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை முள் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நட ராஜனிடம் வழங்கினர். இக்கட்டடம் கட்சியின் உள்ளூர் செயல்பாடுகளை வலுப்படுத்துவ தோடு, தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அமையும் என தலைவர்கள் தெரி வித்தனர்.
