tamilnadu

img

ஈரோடு மாவட்டம்: உரிமைகளை கேட்டால் வன்கொடுமை தாக்குதலா?

இந்திய சாதி அமைப்பு சிக்கலானதும் நுட்பமானதுமான வடிவமைப்பை கொண்டது. இந்திய சமூகத்தில் சாதி அமைப்பு ஏணிப்படி வரிசையில் அமைந்துள்ளது. ஏணிப்படிகளில் முதல் படியும் கடைசி படியும் தவிர இதர படிகள் ஒவ்வொன்றும் மேல் படி யாகவும் இருக்கிறது, கீழ்ப்படியாகவும் இருக்கிறது. ஏனெனில் இப்படிகளுக்கு மேலேயும் படிகள் உண்டு, கீழேயும் படிகள் உண்டு. இதே போலத்தான் இந்திய சாதி அமைப்பும் ‘பார்ப்பனர்களுக்கு மேல் சாதி இல்லை, அருந்ததியர்களுக்கு கீழ் சாதி இல்லை’ என்பது இந்திய வழக்கில் இருக்கும் ஒரு பழமொழியாகும். பார்ப்பனர், அருந்ததியர் ஆகிய இரு சாதி களை தவிர சமூகத்தில் உள்ள இதர சாதி களில் ஒவ்வொரு சாதியும் மேல் சாதியாகவும் இருக்கிறது, கீழ் சாதியாகவும் இருக்கிறது. ஏனெனில், இச்சாதிகளுக்கு மேலேயும் சாதிகள் உண்டு, கீழேயும் சாதிகள் உண்டு. இவ்வாறு இந்திய சமூக கட்டமைப்பில் ஒரு சாதி கீழ் சாதியாக மட்டுமல்ல, அது மேல்சாதி யாகவும் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு சாதி யினரும் மேல் சாதியினராக நடத்தப்படும் போது பெருமைப்பட்டுக் கொள்வதையும், கீழ் சாதி யினராக நடத்தப்படும்போது ஆத்திர மடைவதையும் நடைமுறையில் கண்கூடாகக் காண்கிறோம். ஆனால், தன் சாதி குறித்து பெருமையோ, மகிழ்ச்சியோ அடைய முடியாத ஒரு சாதியாக அடித்தட்டில் அருந்ததியினர் மட்டுமே உள்ளனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மிக கணிசமான எண்ணிக்கையில் அருந்ததி யினர் வாழ்ந்து வருகின்றனர். இதர மாவட்டங் களிலும் ஆங்காங்கு இம்மக்கள் வசிக்கின்ற னர். இதர மாவட்டங்களில் துப்புரவுப் பணியா ளர்களாக பணியாற்றுபவர்களில் கணிசமான வர்கள் அருந்ததியர்களே.

மேற்கு மாவட்டங் களில் இவர்களில் கணிசமானவர்கள் விவசாய கூலித் தொழிலாளர்களாவர். எந்த மாவட்டங் களில் வாழ்ந்தாலும் இவர்கள் வேறு எந்த சாதியினரும் சந்தித்திராத ஒடுக்குமுறை களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகிறார்கள். இப்பிரிவினரின் சமூக, பொரு ளாதார வாழ்நிலை குறித்து சிபிஐ(எம்)மும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பல கள ஆய்வுகளை நடத்தியுள்ளன. இவர்கள் அனுபவித்து வரும் சொல்லொணா சமூக ஒடுக்குமுறைகளை கணக்கில் எடுத்து இவர்கள் முன்னேற்றத்திற்கென தனித்துவ மான கோரிக்கைகளை சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கின. இவை குறித் தெல்லாம் தனியாக பரிசீலிக்கலாம். மேற்கு மாவட்டங்களில் இவர்கள் மீதான தீண்டாமை, வன்கொடுமை பிரச்சனைகளில் செங்கொடி இயக்கம் வலுவாக தலையிட் டுள்ளது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செய்த தலையீடுகளும் இதனால் பெற்ற பலன் களும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இதுகுறித் தான பல நிகழ்வுகளை இங்கு நாம் குறிப்பிட முடியும். *    ஈரோடு மாவட்டம் பள்ளிமடைக்குட்டை கிராமத்தில் குருநாதன் என்பவரது குடும்பம் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வண்டி தடத்தை திடீரென பயன் படுத்தக் கூடாது என சாதிய சக்திகள் தடை விதித்தனர். குருநாதன் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வண்டித் தடத்தில் நடந்த தலித் அருந்ததிய பிரிவினரை சாதிய சக்திகள் கடுமையாகத் தாக்கினர்.  கட்சி தலையிட்டு நடவடிக்கை எடுத்ததால் தாக்கியவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவாகியது. வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் என சாதிய சக்திகள் மிரட்டினர்.

குருநாதன் மகன் முருகனையும் அவரது மனைவியை யும் கத்தியால் குத்தினர். சிகிச்சை பல னின்றி முருகன் இறந்து போனார். இப்பிரச் சனையில் சிபிஐ(எம்) வலுவாக தலை யிட்டது. கொலை வழக்கை நடத்துவதில் தலித் மக்களுக்கு உறுதியான பாதுகாப்பு கொடுத்தது. சாட்சிகளை பாதுகாத்ததிலும் குற்றவாளிகளை தண்டிப்பதிலும் கட்சி தொடர்ந்து அக்கறை காட்டியது. இதன் காரணமாக கொலைகாரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை (31 வருடம்) நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு ரூ.2,76,000 இழப்பீடு கிடைக்கவும் கட்சி ஏற்பாடு செய்தது. சிபிஐ(எம்) எடுத்த முயற்சிகளுக்கு தலித் மக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்தனர். அதன் தலைமையிலான வர்க்க வெகுஜன அமைப்புகளில் கணிசமானவர்கள் இணைந்தனர். இன்றளவும் செங்கொடி இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். *    பவானி தாலுகா காட்டுப்புதூரில் பால் சொசைட்டியில் தலித் மக்கள் பால் ஊற்றக்கூடாது என தடுக்கப்பட்டனர். சிபிஐ(எம்) தலையிட்டு இக்கொடுமைக்கு எதிராக தட்டிக் கேட்டது. ஒரு போராட்ட மாக இப்பிரச்சனையை முன்னுக்கு கொண்டு சென்றது. ஆவின் உயர்மட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசு நிர்வாகத் திற்கும் புகார் செய்து உடனடியாக தலை யிடுமாறும், இல்லையேல் வலுவான போராட்டக் களத்தில் இறங்குவோம் எனவும் கட்சி எச்சரிக்கை செய்தது. வேறு வழியின்றி சாதிய சக்திகள் இறங்கி வந்தனர். இறுதியில் ஒரு சமரச முடிவு ஏற்பட்டது. தற்போது தலித் மக்கள் பால் சொசைட்டியில் பால் விற்பதற்கு எந்த தடையும் இல்லை. *    வெள்ளக்கோவில் ஒன்றியம் சின்னக் கோவில் பாளையம் என்ற கிராமத்தில் அருந்ததியர் ஒருவரை, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்த ஒருவர் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு அவரை கடுமையாக தாக்கவும் செய்தார். இதன் பேரில், காவல்துறையில் புகார் செய்யப் பட்டது. காவல்துறையினரும் வன் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் முதலில் வழக்கு பதிவு செய்தனர். பிறகு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் ஒரு விசாரணை நடத்தி இந்த வழக்கை தள்ளு படி செய்தார். துணை கண்காணிப்பாளரின் இந்த அநீதியான நடவடிக்கையை கண்டித்து சிபிஐ(எம்) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் பிறகு இப்பிரச்சனை மாவட்ட அளவில் அரசு அமைத்திருந்த தீண்டாமை ஒழிப்புக் குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால், அக்குழுவும் இப்புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனாலும், சிபிஐ(எம்) இப்பிரச்சனையை கைவிட வில்லை.

தனி புகார் மூலம் இப்பிரச்சனை நீதிமன்ற நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) உதவியுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. *    பெருந்துறை வட்டம் திருவாச்சி என்ற கிரா மத்தில் அந்த ஊர் இளைஞர்களுக்கு சலூன்களில் முடிவெட்ட மறுத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இப்பிரச் சனையில் தலையிட்டு வட்டாட்சியரிடம் புகார் செய்யப்பட்டது. தலித் இளைஞர் களுக்கு முடிவெட்ட மறுத்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் வட்டாட்சியர் தலையிட்டு சலூன் கடை உரிமையாளர்கள் மீது வன் கொடுமை வழக்கு பதிவாக ஏற்பாடு செய் தார். இதனால் ஆத்திரமடைந்த சாதிய சக்திகள் அருந்ததியர் மக்கள் வழிபாடு நடத்தி வந்த மதுரைவீரன் மற்றும் அய்ய னார் சாமி கோவிலில் திருவிழா நடத்த தடை செய்து வன்மமான நடவடிக்கை களில் இறங்கினர். இந்த இரு கோவில் களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நிலத்தில் அமைந்திருந்ததால் அருந்ததி யினர் கோவிலுக்கு வரக்கூடாது என தகராறு செய்தனர். தனியார் இடத்தில் கோவில் அமைந்திருந் தாலும் வழிபாடு நடத்தவோ, திருவிழா நடத்தவோ அருந்ததியினருக்கு உரிமை உண்டு என பல நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக் காட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி வாதாடி யது. மட்டுமல்ல, தலித் மக்களின் உரிமை களை வற்புறுத்தினால் ஏற்கனவே வழிபட்டு வந்த கோவில்களில் வழிபாட்டு உரிமையை தடை செய்வதா? என கேள்வி எழுப்பி கே.பாலபாரதி எம்.எல்.ஏ தலைமை யில் கோவில் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அவ்வட்டா ரத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்நிலை யில் தமிழக அரசின் சார்பில் வட்டாட்சியர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி திருவிழா நடத்த அனுமதி கொடுத்தார். இத னால் அருந்ததியர் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். திருவிழா நடைபெற காரணமாக இருந்த சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களுக்கு உணர்ச்சி பொங்க நன்றியை வெளிப்படுத்தினர்.

* மேற்கண்ட போராட்டங்களை தொடர்ந்து அதுகாறும் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருந்த எழுவாத்தூர் ஈஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்த அருந்ததியர் மக்கள் அணிதிரண்டனர். இவர்களுக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமை ஏற்று ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப் பட்டது. உடனடியாக அரசு நிர்வாகம் தலை யிட்டு இக்கோவிலிலும் காவல்துறையின் பாதுகாப்புடன் அருந்ததியர் வழிபாடு நடத்த அனுமதி அளித்தனர். இதேபோல கொடுமுடி வட்டம் ராசாம்பாளையம் சுயம்பு மாரியம்மன் கோவிலிலும் அருந்ததியர் மக்கள் வழிபாடு நடத்த தமிழக அரசு நிர்வாகம் அனுமதி அளித்தது. இப்பிரச்சனையிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டு தலைமை யேற்றது. இவ்வாறு தொடர்ந்து மூன்று கோவில்களிலும் செங்கொடி இயக்க தலை யீடுகளால் அருந்ததியர் மக்கள் ஆலய நுழைவு பிரச்சனையில் வெற்றி அடைந்தது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அருந்ததியர் மக்கள் தங்களை சிபிஐ(எம்) மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் இணைத்துக் கொண்டனர். * அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை அருந்ததியர் மக்களுக்கு மட்டும் அதன் நிர்வாகம் வாடகைக்கு தருவதில்லை. இப்பிரச்சனை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத் திற்கு வந்தபோது அரசு அதிகாரிகளிடம் முறை யிடப்பட்டது. ஆயினும், நியாயம் கிடைக்க வில்லை. இந்நிலையில் பி.சம்பத் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் 500க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்ட இவ்வியக்கம் எழுச்சியாக அமைந்தது. அந்த வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

* அந்தியூர் தாலுகா வேப்பத்தி கூலிவலசு அருந்ததியர் காலனியைச் சார்ந்தவர் களுக்கும் அருகில் இருந்த பிற சாதியின ருக்கும் பூக்காட்டு திருவிழாவையொட்டி சிறு வாய்த் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறுநாள் வேலை தேடிச் சென்ற மாதன் என்ற இளைஞனை 6 பேர் வழி மறித்து சாதியைச் சொல்லி கடுமையாக தாக்கி யுள்ளனர். மேலும், அந்த வழியில் சென்ற வர்கள் எல்லாம் அந்த இளைஞனை இழிவான வார்த்தைகளால் திட்டி அவனை வேலை தேட விடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இப்பிரச்சனை அறிந்ததும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காவல் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் பிறகு இளைஞனை தாக்கியவர்கள், இழிவுபடுத்தியவர்கள் மீது வன்கொடுமை வழக்கு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டது. தாக்கப்பட்ட இளைஞனுக்கு ரூ.23,000 நிவாரணம் கிடைத்தது. * பவானி தாலுகா வளைக்காரப்பாளை யத்தைச் சார்ந்த ராமன் என்பவர் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணியை செய்து வந்துள் ளார். உடனடியாக அவருக்கு கூலி தரப்பட வில்லை. இந்நிலையில் வடக்கு தயிர்ப்பாளை யம் அருகே தோட்ட உரிமையாளர்கள் நின்று கொண்டிருந்தபோது அவர்களிடம் கூலியை தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த தோட்ட உரிமையாளர்கள் அவரை சாதியைச் சொல்லி திட்டி பார்க்கிற இடத்தில் எல்லாம் கூலியை கேட்பாயா? எனக் கேட்டு கையில் இருந்த பால் கேனை கொண்டு தாக்கியுள்ளனர். இப்பிரச்சனை அறிந்த சிபிஐ(எம்) உடனடியாக தலையிட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உதவியது. இதன்பிறகே, தாக்கியவர்கள் மீது வன்கொடுமை வழக்கு காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது. தாக்கப்பட்ட ராமனுக்கு ரூ.50,000 நிவாரணம் கிடைத்தது. * நசியனூர் மேற்குப்புதூர் அருந்ததியர் காலனியைச் சார்ந்த ராஜா அருகிலிருந்த தேநீர் கடையில் பெஞ்சில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சார்ந்த பெரிய சாமி, லோகேஷ், நந்தகுமார் உட்பட 10 பேர் ராஜாவைப் பார்த்து “நாங்கள் வரும்போது பெஞ்சில் அமர்ந்து டீ குடிப்பாயா” எனக் கேட்டு கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர். இப்பிரச்சனை யிலும் சிபிஐ(எம்) தலையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன் பிறகு காவல்துறையினர் தாக்கியவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். * பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தாட்கோ சார்பாக தலித் மக்கள் தொழில்முனை வோராக செயல்படுவதற்கு ரூ.300 கோடி செலவில் 150 ஏக்கரில் 200 தொழிற்கூடங்கள் 1996இல் உருவாக்கப்பட்டன. கட்டி முடிக்கப் பட்டு 27 ஆண்டுகளை கடந்த பின்பும் இந்த சிப்காட் வளாகம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. தலித் மக்களின் வாழ்வாதா ரத்திற்கு வழிவகுக்கும் இந்த சிப்காட் வளாகத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.

மாநில ஆதி திராவிட நலத்துறை அமைச்சர், மாநில ஆதி திராவிட நலத்துறை செயலாளர் ஆகியோருக்கும் சிப்காட் வளாகத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதன் பிறகு, தற்போது சிப்காட் வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளனர். * சத்தியமங்கலம் வட்டம், ராஜன் நகர் பகுதியில் கலைஞர் ஆட்சி காலத்தில் தலா 2 ஏக்கர் நிலம் வீதம் 23 தலித் அருந்ததியர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பிறகு இந்நிலம் தலித் மக்களின் பயன்பாட்டில் இல்லை என உண்மைக்கு மாறான புகார்களை சில நபர்கள் தெரிவித்ததால் இந்நிலத்தின் உரிமையை ரத்து செய்துவிட்டார்கள். இந்த நிலம், சம்பந்தபட்ட தலித் மக்களின் பயன் பாட்டில் இருப்பதற்கான ஆதாரங்களை காட்டி நிலத்தை மீண்டும் வழங்குமாறு தலித் மக்கள் முறையீடு செய்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு இந்த நிலம் தலித் மக்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது. இழந்த நிலத்தை திரும்ப பெற்ற தலித் மக்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நன்றி அறிவிப்போடு செங்கொடி இயக்கத்தில் இணைந்தனர். இன்றளவும் செங்கொடி இயக்க நிகழ்ச்சி களில் பங்கேற்று வருகின்றனர். * இதேபோல, அந்தியூர் மாரியம்மன் கோவில் தெருவில் 32 தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர் களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. செங்கொடி இயக்கத்தின் சார்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பல னில்லை. உடனடியாக பட்டா வழங்க சிபிஐ(எம்) சார்பாக போராட்டம் அறிவிக்கப் பட்டது. இதன் பிறகு தற்போது பட்டா வழங்க அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். * ஈரோடு தாலுகா, மொடக்குறிச்சி வட்டம், ஆனந்தம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் நெறிப்பாறையில் வாழும் தலித் அருந்ததியர் மக்களுக்கும் அப்பகுதியில் வாழும் பிற சாதி மக்களும் சில பிரச்சனைகள் காரணமாக மோதல் சூழ்நிலை ஏற்பட்டது.

தலித் மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டியதால் சாதிய சக்திகள் ஆத்திரம் அடைந்து இத்தகைய சூழலை உருவாக்கிவிட்டனர். சிபிஐ(எம்) தலித் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே மோதல் ஏற்படாமல் ஒற்றுமையை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளின் பலனாக மோதல் தவிர்க்கப் பட்டு அமைதி திரும்பியது. இதே சூழ்நிலை பூந்துறை ஊராட்சி சீனிவாசபுரத்தில் ஏற்பட்ட போது கட்சி சார்பாக தலையிட்டு அமைதி திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல, கொடுமுடி வட்டாரம் பெரியூரில் பிற சாதி மக் களுக்கும் தலித் அருந்ததியர்களுக்கும் ஏற்பட்ட மோதல் பிரச்சனையிலும் அருந்ததி யர் உரிமைகளை பாதுகாத்துக் கொண்டே அமைதி திரும்ப சிபிஐ(எம்) மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றி பெற்றன. இவ்வாறு அமைதி திரும்பவும் ஒற்றுமை ஏற்படுத்தவும் தலையிட்ட இடங்களில் நமது வர்க்க வெகுஜன அமைப்புகளில் இம்மக்களின் ஒருபகுதியினரை அணிதிரட்டினோம். * மேற்கு மாவட்டங்கள் சார்பாக ஈரோட்டில் தலித் அருந்ததியர் மக்களின் வாழ்வுரிமை மாநாடு 31.08.2008இல் நடைபெற்றது. 5000 பேர் வரை பங்கேற்றனர். ஈரோட்டிலிருந்து மட்டும் 2000 பேர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் என்.வரதராஜன், பி.சம்பத், கே.தங்கவேல் மற்றும் பல தலித் அமைப்புகளின் தலை வர்கள் பங்கேற்றனர். கொட்டும் மழையிலும் இம்மாநாடு மிக எழுச்சியாக நடைபெற்றது.