தோழர் கே.பி. நூர்முகமது அரங்கம் திறப்பு விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழுவின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தில் தோழர் கே.பி. நூர்முகமது நினைவுக் கூட்ட அரங்க திறப்பு விழா, திங்கட்கிழமையன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கட்டடத்தை திறந்து வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. வீரபாண்டி, வி. கருப்புசாமி, எஸ். முத்துராமலிங்க பூபதி, ஏ. ஆறுமுகம், ஏ. சேதுராமன், ஏ.ஜே. சுரேஷ், பி. அய்யம்பாண்டி மற்றும் தாலுகா செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
