கோவை,அக்டோபர்.23- பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மானவர் சங்கத்தினர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பணியிடங்களும், தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளது. இது தவிர ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என 700க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப வேண்டும் என பல தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.