tamilnadu

img

கோவை ஆட்சியராக பவன்குமார் க.கிரியப்பனவர் பொறுப்பேற்பு!

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் க.கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு திறன்மேம்பாடு கழகம் மேலான்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக பணியாற்றி வந்த பவன்குமார் க.கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ். , கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பவன்குமார் க.கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது : 
"இந்த சிறந்த மாவட்டத்தின் முக்கிய பொருப்பில் இணைந்துள்ளேன். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை மக்களிடையே கொண்டுச் செல்லும் அனைத்து முயற்சிகளையும் செய்ய உள்ளோம். கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சிறப்பு திட்டங்கள் அனைத்து துறையுடனும் இணைந்து கொண்டு வர எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு தனி கவனம் செலுத்தி துறை அலுவலர்களுடன் இணைந்து தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும், கோவை மாவட்டத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாவட்டத்திற்கு தேவையான சேவைகளை மேற்கொள்ள உள்ளோம் அனைவரின் முழு ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன். போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு காவல் துறையுடன் இணைந்து கடுமையாக்கியுள்ளது,. அதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.