உலகம் மழையால் வாழ்வதை ஏற்று,
மழையை அமிழ்தம் என்றே போற்று!
மழையே உணவைத் தந்து சிறக்கும்
மழையே உணவாய் அமைந்து நிற்கும்!
மழையிப் புவியில் பெய்யாக் கேடு
மண்ணில் உயிர்படும் பசியின் பாடு!
மழைதான் பொய்த்துப் போனால் எங்கும்
மண்ணை ஏரால் உழுவது மங்கும்!
மழையே பெய்து கெடுத்திடும் தம்பி
மழையே பெய்து கொடுத்திடும் நம்பி!
மழைத்துளி மண்ணில் விழாது போக
மறைந்திடும் ஓரறி உயிர்மு தலாக!
கடலில் மேகம் தாகம் தணிக்கும்!
குடித்ததை மீண்டும் கடலில் திணிக்கும்!
கடலில் மழைத்துளி வீழா தாயின்
கடலும் வளமைக் குன்றும் ஆயின்!
வானம் பொய்த்தால் வானோர் விழியும்
வாட்டம் ஆகும் வழிபா டொழியும்!
தானமும் தவமும் இல்லா தாகும்
தன்வளம் குன்றும் மழையால் ஆகும்!
நீரின்றி இயங்கா உலகம்! வானின்
நீரின்றி அமையா ஒழுக்கம் காணின்!
வேராம் உயிர்க்கு வேண்டிய மழையை
வேண்டின் மரம்வளர் காண்பாய் மழையை!