tamilnadu

img

லைசன்ஸ் நியமன முறையை கைவிடக்கோரி நில அளவை அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு

தருமபுரி, நவ. 7- நிலஅளவை துறையில் லைசன்ஸ், சர்வேயர் நியமன முறையை கைவி டக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். நில அளவை கூடுதல் இயக்குநர் பணி, கடமை அதிகார வரம்பு, பணித் தன்மையை மாற்றம் செய்யும் நில அளவை இயக்குனர் அரசுக்கு அனுப் பிய முன்மொழிவை கைவிடவேண் டும். நில அளவை களப்பணியில் லைசன்ஸ் சர்வேயர் பயன்படுத்தும் நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்தி ரள் முறையீடு போராட்டம் வியாழ னன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் குமரவேல், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக் கையை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.சேகர் வாழ்த்தி பேசினார். அரூர் கோட்டத் தலைவர் ஜெயசீலன் நன்றி கூறினார். போராட்டத்தின் நிறைவாக, சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.