tamilnadu

img

மாநில உரிமை பாதுகாப்பு தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம்

திருநெல்வேலி, நவ.17- நெல்லை மாவட்டம் சங்க ரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை பாதுகாப்பு, தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கரன்கோவில் பர க்கத் மண்டபத்தில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலாளர் பா.அசோக்ராஜ் தலைமை வகித்தார். வட்டாரக் குழு உறுப்பினர்கள் சி.கே.குமார், லட்சுமி முருகன், ரத்தி னவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர், வட்டாரக் உறுப்பினர் பி.பாலு சாமி வரவேற்றார்.  சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.ஜெயராஜ், உ.முத்துப்பாண்டியன் ஆகி யோர் பேசினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க சிறப்புத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார்.  மத்திய அரசு இந்தி திணி ப்பை கைவிட வேண்டும், தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக அறி வித்திட வேண்டும், தமிழ் மொ ழியை அனைத்து நிலையிலும் பயிற்சி மொ ழியாக வேண்டும், நாடாளு மன்றத்தில் அவரவர் தாய்மொழியில் பேச ஏற்பாடு செய்திட வேண்டும், நீதி மன்றங்களில் வழக்காடும்  மொழியாக தமிழை அறி விக்க வேண்டும் என தீர்மா னிக்கப்பட்டது. வட்டாரக் குழு உறுப்பினர் வேலு ச்சாமி நன்றி கூறினார்.