சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
பொதுமக்கள் உண்ணாநிலை போராட்டம்
சிதம்பரம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பட்ரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சி மற்றும் சி.கொத்தங்குடி, சி. தண்டேஸ்வரர் நல்லூர், உசுப்பூர், பள்ளிப்படை உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இதற்கு அனைத்து ஊராட்சி களில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் லால்புரம் ஊராட்சியில் உள்ள பொது மக்கள் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு அளித்தனர். மேலும் ஊராட்சியை நகராட்சி யுடன் இணைக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் ஊராட்சியை நகராட்சி யுடன் இணைப்பதை கண்டித்து லால்புரம் ஊராட்சியில் உள்ள 1000திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணலூர் நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் முன்பு உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலை வர் வி எம் சேகர், போராட்ட ஒருங்கி ணைப்பு குழுவினர் ஆனந்த், சாய் பிரகாஷ், சத்தியமூர்த்தி, பி.என் மூர்த்தி, ராஜேந்திரன், தமிமுன் அன்சாரி, ரவி, கிருஷ்ணமூர்த்தி, ராஜலட்சுமி, இலக்கியா, லதா, வினோதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜாகிர்உசேன் கூறுகையில், லால்புரம் ஊராட்சியில் 3000திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 300 ஏக்கருக்கு மேல் விளை நிலம் உள்ளது. விளைநிலம் உள்ள இடத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது என அரசாணை உள்ளது. மேலும் நகராட்சியுடன் இணைத்தால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும். அதேபோல் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர், வீட்டு வரி மிகவும் அதிகமாக விதிக்கப்படும் இப்பகுதியில் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழிலாளர்கள். எனவே இவர்க ளின் வாழ்வாதாரத்தை கருதி நகராட்சி யுடன் இணைக்கக் கூடாது என்றார். இந்நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.