tamilnadu

img

ஒரே நாடு ஒரே தேர்தல் முட்டாள்தனமான முடிவு ஒன்றிய அரசுக்கு ம.நீ.ம. கண்டனம்

சென்னை,செப்.21- மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பி னர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செப்டம்பர் 21 அன்று  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காம ராஜர் அரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப் பட்டார். 

பெண்களுக்கு எதிராக நடை பெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மநீம ஒரு குழுவை உரு வாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கை யை, பரிந்துரைகளை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சமர்ப்பிப்பதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய் யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கும். 

ஒன்றிய அரசு சாதி வாரியான கணக்கெடுப்பை இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும். தமிழகத்துக்கு உரிய நிதிப்பகிர்வை அரசி யலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழக மக்களைத் தண்டிக்கும் போக்கை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாய கத்தை மண் கொண்டு புதைக்கும் செயல். ஒரே நாடு ஒரே தேர்தல். அழகான மாளிகையை சிதைத்துவிட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவு தான் இது. ஒன்றிய அரசின் இந்த முடிவை மநீம வன்மை யாக கண்டிக்கிறது என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.