districts

img

தோழர் பி.ராமமூர்த்தி சட்டமன்ற உரைகள் நூல் வெளியீட்டு விழா

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும் சிஐடியு ஸ்தாபகத் தலைவருமான ‘தோழர் பி.ராமமூர்த்தியின் சட்டமன்ற உரைகள்’ நூல் மதுரையில் வெள்ளியன்று வெளியிடப்பட்டது. இந்நூலை பி.ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது புதல்வியர் டாக்டர் ஆர்.பொன்னி, வழக்கறிஞர் ஆர்.வைகை ஆகியோர் வெளியிட, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமுவேல்ராஜ்,  எஸ்.கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மூத்த தலைவர்கள் ஏ.லாசர், சி.ராமகிருஷ்ணன்,  மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, துணைமேயர் தி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.