tamilnadu

img

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைப்பு

சென்னை, செப்.21- திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்க ளின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல, விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்தி ருப்பதை கல்வித்துறை கண்டு பிடித்துள்ளது. அதாவது, முறை கேடாக மாணவர்களின் எண்ணிக் கையை பதிவு செய்து நலத்திட்ட உத விகள் பெற்று வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முறைகேடு களை களையும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை செயல் பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ். தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகா ரிகளாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.  இந்த அதி காரிகள், அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் ஆய்வு மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வர். மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட் டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டம் தோறும் ஆய்வு செய்து, அறிக்கையை 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.