districts

img

கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் நிலப்பிளவு: மக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்,செப்.21- கொடைக்கானல் அருகே கேரளாவை ஒட்டிய வனப்பகுதி யில் 300 அடி நீளத்துக்கு நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது.இத னால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேல்மலையில் உள்ள கடைசி கிராம மான கீழ் கிளாவரை பகுதிக்கு செருப்பன் ஓடையிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டுசெல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால் கீழ் கிளாவரை பகுதியிலிருந்து சிலர் வனப் பகுதிக்குள் சென்று பார்த்தனர். கூனிப் பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்துக்கு மேல் நிலம் தனியாக பிளந்து இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிலத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில் நில அதிர்வு ஏற்பட்டி ருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு அபாயம் நிகழ்ந்துள்ள நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. 

ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

குடிதண்ணீர் மற்றும் வயல்வெளிகளுக்கு பாய்ச்சும் நீர்  இந்த பகுதியில் இருந்து மட்டுமே வருவதாகவும், விரைந்து  வந்து இப்பகுதியை ஆய்வு செய்து தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.