tamilnadu

img

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டாயம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

  1. தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்களுக்கும், 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்களுக்கும் அட்டவணையை அறிவித்தது.
  2. நாடு முழுவதும் உள்ள 2,18,807 வாக்குச்சாவடிகளில் "கட்டாய குறைந்தபட்ச வசதிகள்” மற்றும் வாக்காளர் உதவி வசதிகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்று மாநில/மத்தியப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  3. குடிநீர், நிழலுடன் கூடிய காத்திருப்பு பகுதி, கழிப்பறை (தண்ணீர் வசதியுடன்), போதுமான விளக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சரியான சாய்வு ரேம்ப், நிலையான வாக்குப் பெட்டி அறை, வழிகாட்டி பலகைகள் ஆகியவை அடங்கும். மேலும் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அமருவதற்காக இடைவெளிகளில் நாற்காலிகள் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  4. வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்க, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வகையான Voter Facilitation Posters (VFP) கட்டாயமாக ஒட்டப்பட வேண்டும். இதில் வாக்குச்சாவடி விவரங்கள், வேட்பாளர் பட்டியல், செய்யவேண்டியவை/செய்யக்கூடாதவை, அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் மற்றும் வாக்களிப்பு நடைமுறை ஆகியவை இடம்பெறும்.
  5. ஒவ்வொரு வாக்குச்சாவடி வளாகத்திலும் Voter Assistance Booth (VAB) அமைக்கப்படும். இதில் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்களுக்கு அவர்களின் வாக்குச்சாவடி எண் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்ணை கண்டறிய உதவுவார்கள்.
  6. வாக்காளர்களின் வசதிக்காக, வாக்குச்சாவடி நுழைவாயிலுக்கு வெளியே மொபைல் போன் ஒப்படைப்பு வசதி ஏற்படுத்தப்படும். வாக்காளர்கள் தங்கள் மொபைலை (ஆஃப் செய்து) ஒப்படைத்து வாக்களித்து முடித்த பின் மீண்டும் பெறலாம்.
  7. இந்த அனைத்து வசதிகளும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.