tamilnadu

img

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சிதம்பரம்,மார்ச் 6- சிதம்பரம் பேருந்து நிலை யத்தில் ஆக்கிரமிப்புக் கடை களை காவல் துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். சிதம்பரம் பேருந்து நிலை யத்துக்கு தினமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பயணிகள் வந்து செல்கின்ற னர். பேருந்து நிலையத்தில் பயணிகள் செல்லும் முகப்பை வியாபாரிகள் ஆக்கிரமித்தும், உள் வாட கைக்கு விட்டு கடை வைத்  துள்ளனர். இதனால்  பயணி கள் கடும் அவதியடைந்து வந்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பயணி கள் வெயிலிலும், மழையி லும் பேருந்துகள் நிறுத்தப்ப டும் இடத்தில் நிற்கும்  அவலநிலை ஏற்பட்டது.  இதனால் போக்குவரத்து  நெரிசல், விபத்துக்கள்  ஏற்பட்டு வந்ததால் ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண் டும் என்று பல்வேறு பொது நல அமைப்புகள்  உள்ளிட்ட பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைதொடர்ந்து  சிதம் பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் ஆய்வாளர்  முருகேசன், உதவி ஆய்வா ளர் சுரேஷ் முருகன், காவல் துறையினர், நகராட்சி ஊழி யர்கள், பேருந்து நிலைய நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். தற்போது பேருந்து நிலைய முகப்பு விசாலமாக  உள்ளது.