tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனின் சுயசரிதை நூல் வெளியீடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜனின் சுயசரிதை நூலான ‘தொடர் ஓட்டம் டி.கே. ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வுகள் - நினைவுகள் - சுயசரிதை’ வெளியீட்டு விழா இன்று 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது. 
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி இந்நூலை வெளியிட, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் அதனை பெற்றுக் கொண்டார். 
புத்தக வெளியீட்டு விழாவில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலையான், மாநில பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், துணைத் தலைவர் ஆர். சிங்காரவேலு, மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலு, பாரதி புத்தகாலயம் க. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.