tamilnadu

img

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்

சென்னை,செப்.21- அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவ ரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி யில் போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது, ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

சென்னை பெருங்களத்தூ ரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்த மான ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரை வெட் லிமிடெட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் ஆயி ரத்து 453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தது.

ஆனால், அந்தத் திட்டத்து க்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்கவில்லை. இந் நிலையில், 2016-ஆம் ஆண்டு  திடீரென அனுமதி வழங்கப் பட்டது. இந்த அனுமதி வழங்க அப்போதைய அமைச்சரான வைத்திலிங்கத்துக்கு 27 கோடியே 90 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த பணம் அந்த குழுமத்துக்கு சொந்தமான ‘பாரத் கோல் கெமிக்கல் பிரை வெட் லிமிடெட்’ மூலம் வைத்தி லிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர் செல்வம் ஆகியோர் இயக்கு நர்களாக இருந்த ‘முத்தம்மாள் எஸ்டேட் பிரைவெட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு இத் தொகை கடனாக வழங்கப் பட்டது போல கணக்கு காட்டப் பட்டது.

தங்களுக்கு கிடைத்த லஞ்ச பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சி பாப்பா குறிச்சியில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நாலரை ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இதேபோன்று, லஞ்ச பணம் கிடைத்த காலகட்டத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை அடுத்தடுத்து வாங்கியுள்ளனர். எனவே முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், குற்றச்சாட் டில், உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவி னர், அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங் கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவரது உறவினர் பன்னீர்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவ னம், பாரத் நிறுவனம் உள்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டப்  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைவரிடமும் ஊழல் தடுப்புப் பிரிவினர் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.