tamilnadu

img

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைப்பு!

சென்னை,செப்.21- தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு மாதத்திற்கு ஒருமுறையாவது பள்ளி மற்றும் முதன்மை கல்வி லௌவலகத்தை ஆய்வு செய்து அதன் ஆய்வு அறிக்கையை  5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அருகே சில பள்ளிகளில் போலி ஆட்சேர்ப்பு சம்பவம் நடைபெற்றதையடுத்து தமிழ்நாடு அரசு புதிய குழு அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.