சென்னை,செப்.21- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆவின் மூலமே நெய் வாங்கப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
பழனி பஞாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பபட்ட நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியளர்ளிடம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2021 ஆண்டே கோயில்களுக்கு ஆவின் மூலம் மட்டுமே நெய் வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆவின் மூலமே நெய் வாங்கப்படுகிறது.
இறை நம்பிக்கை உள்ள மக்களுக்கு எதிரான ஆட்சியாகத் திசைதிருப்பச் சிலர் முயல்கின்றனர். வதந்தி பரப்பியவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்