tamilnadu

img

கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’ கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (பிப்,25)  திறந்து வைத்தார். விளையாட்டு துறையில் இந்தியாவி லேயே சிறந்த மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கிடவும். அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவி லும் நடைபெறும் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல். உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், விளையாட்டிற் கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப் பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதி களை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிட மிருந்து நன்கொடை பெற்று ஏற்படுத் திட “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்க ட்டளை”யை உருவாக்கியது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட் டில் நடத்திட தேவையான உட்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கையில், சென்னை நகரமானது பாரம்பரிய மாகவே குத்துச்சண்டை விளையாட் டிற்கு புகழ்பெற்றது. சென்னையில் பல்வேறு குத்துச்சண்டை வீர்ர்கள் உரு வாகி குத்துச்சண்டை விளையாட்டில் புகழ்பெற்று விளங்கினர். தமிழ்நாட் டில் குத்துச்சண்டை விளையாட்டை மீண்டும் புகழ்பெறச் செய்ய, பல்வேறு உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்களை உருவாக்குவது அவசிய மானதாகும். எனவே, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் குத்துச் சண்டை விளையாட்டிற்கு புத்துயிர் அளிக்க குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சரால் 2.11.2023 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, கோபாலபு ரத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குத்துச்சண்டை அகாடமி அமைப்ப தற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடி செலவில், 890 நபர்கள் அமரும் வகை யிலான பார்வையாளர் மாடத்துடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட உள்அரங்கம், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சியாளர் அறை, பயிற்சி செய்யும் பகுதி, மருத்து வர் அறை, நிர்வாக அலுவலகம் ஆகிய வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை  அகாடமியை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, அங்கு நடை பெற்ற 48 முதல் 51 கிலோ எடைப் பிரிவிற்கான குத்துச்சண்டை போட்டியை பார்வையிட்டு, வெற்றி பெற்ற வீராங்கனைக்கு கோப்பையை வழங்கினார். இந்த குத்துச் சண்டை அகாடமி அமைக்கப்படுவதன்மூலம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள குத்துச்சண்டை ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பதக்கங் களை வெல்வதற்கு நல்வாய்ப்பாகவும் அமையும் என்று மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.