ஷேர் ஆட்டோக்களில் 4 பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டு மென்று ஓட்டுநர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். சென்னை நகரின் பொதுப் போக்குவரத்து தேவையின் ஒருபகுதியை நிறைவேற்றி வந்தவை ஷேர் ஆட்டோக் களே. அதிலும் குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி தகவல் தொழில் நுட்ப அதிவிரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் இயங்கு கின்றன. குறிப்பிட்ட தூரத்திற்கு சாதாரண ஆட்டோக்களில் வசிக்கும் கட்டணத்தை விட 5 முதல் 10 மடங்கு கட்டணம் குறைவாக வசூ லிக்கக் கூடியவை ஷேர் ஆட்டோக்கள். இந்த ஷேர் ஆட்டோக்களை இயக்கக்கூடியவர்கள் பெரும்பாலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங் கால் பிற தொழில்களைப் போன்றே ஷேர் ஆட்டோ தொழிலும் முடங்கியது.
இதனால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பறிபோனது. இந்தக்காலத்தில் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் - டைடல் பார்க் ஷேர் ஆட்டோ நிறுத்தம் முன்னுதாரண மான செயலில் ஈடுபட்டது. சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட இந்த நிறுத்தத்தில் 96 ஓட்டுநர்கள் உள்ளனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ, நிறுத்தத்தின் தலைவர் எம்.சேகர், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணி யன், பொருளாளர் எம்.எஸ்.பாபு ஆகியோர் இணைந்து 90 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கினர். சங்கத்தில் வைத்திருந்த பணம், பிற நபர்களின் உதவிகளை பெற்றனர். ஒவ்வொரு ஓட்டுநரின் வீட்டிற்கும் நேரடியாக சென்று ஆயிரம் ரூபாய் பணம், ஒரு மூட்டை அரிசி, 3 தவணைகளாக காய்கறிகளை வழங்கினர். தற்சமயம், 5ம் கட்ட ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வால் சுமார் 70 நாட்களுக்கு பிறகு தற்போது ஷேர் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி யுள்ளன. ஆனால் முன்பு போல் பயணிகள் வருகை இல்லாததால், வருமானம் இல்லை என்று ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஷேர் ஆட்டோவை இயக்கினாலும் நட்டம் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர். “ஊரடங்கிற்கு முன்பு சாதாரணமாக ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும். பெட்ரோல், வாடகை போக 400 ரூபாய் கையில் நிற்கும். தற்போது நாளொன்றுக்கு 200 ரூபாய் கூட வரவில்லை. பெட்ரோலுக்கான பணத்தை கூட ஈட்ட முடியவில்லை. சாதாரணமாக, டைடல் பார்க்கிலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஆட்டோவில் 15 ரூபாய் வரை வசூலிப்பார்கள். ஷேர் ஆட்டோவில் 20 ரூபாய்தான் வசூலிக்கிறோம். 2 பேர் என்றால் 40 ரூபாய்தான் வருகிறது. இப்படி இருந்தால் எப்படி ஆட்டோவை ஓட்ட முடியும். எனவே, சீட்டுக்கு 2 பேர் வீதம் 4 பேரை வைத்து ஓட்ட அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஷேர் ஆட்டோ நிறுத்தத்தின் தலைவர் எம்.சேகர்.