தோழர் சீத்தாராமின் ஆளு மையை அறிய நெஞ்தை தொடும் தகவல்கள் கொண்ட தேர்வு செய்யப்பட்ட கட்டுரை களை நேர்த்தியாக வடிவமைத்து தந்த இந்த இளைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இளைஞர் பட்டாளம் என்றால் தமிழகத்தில் தலைவர் துதி பாடி தலை வரின் பார்வையிலேபட முயற்சிக்கும் கூட்டம் என்றே கருதப்படுகின்றனர் ஆனால் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் அந்த ரகமல்ல, தங்களது சிந்தனைக்கும் செயலுக்கும் உதவுபவர்களை ஆசானாக கருதும் சுயேச்சையாக.இயங்கும் இயக்க மாகும். ஆசானிடம் கற்றதை மேன்மைபடுத்தும் ஆற்றல் பெற்ற இயக்கமாகும், இந்த தொகுப்பை வாசித்தாலே அது புரியும். சீத்தாராம் யெச்சூரி மறைவை யொட்டி, அவரை அறிந்தவர்கள். அவ ரோடு இணைந்து வேலை செய்த வர்கள், மானுட உரிமைக்காக போராடுவதால் ஒன்றிய அரசால் வேட்டையாடப் பட்ட அறிவுலக மேதைகள் எழுதி ஆங்கில இதழ் களிலே வெளி வந்தவைகளை மொழி பெயர்ப்பு என்ற நெருடல்இல்லாமல்.நல்ல தமிழிலே தந்துள்ளனர்.
அட்டையில் எப்படி மரணிப்பாய் எம் தோழா என்ற வாசகத்தை வாசித்த வுடன் இதென்ன சென்ட்டிமென்டல் புலம்பல் என்று அவசரப்பட்டால் ஏமாந்து போவர். உண்மைக்கும் உணர்வுண்டு என்பதை இத் தொகுப்பில் உள்ள வீரய்யா கொண்டூரி எழுதியதை படிப்ப வர்கள் உணர்வர் . இதனை வாசிப் பவர்கள் யாராக இருந்தாலும் கண்களில் நீர் திரள “சீத்தாராமா! எப்படி மரணிப்பாய் எம் தோழா” என்றே சொல்லவைத்துவிடும். வீரய்யா கொண்டூரி சீத்தாராமின் உதவியாளர் .இவரும் யெச்சுரி போல் இவரது பேராசிரியரால் பாராட்டைப் பெற்ற ஆய்வு மாணவன், பட்டம் பெறாமலே மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானவர் இந்த கட்டுரையில் யெச்சூரியின் செயல்படும் விதம், குறிப்பாக நாடாளுமன்ற உரைகளை தயாரிக் கும் முறை அதை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிற முறையில் உரையாற்றுகிற பாணி, கேட்பவர்கள் காதுவழியாக நெஞ்சை தொடுகிற சாதனை. உலக அரசியலிலும் உள்நாட்டு அரசியலிலும் பங்கெடுத்த முறை இந்தியா போண்ற ஒரு பெரிய நாட்டின் அரசாங்க பதவிஎதுவும் பெறாமல் ஐக்கிய நாட்டு சபையிலே பேசிய அரசியல் தவைவர் இவர் ஒருவர்தான் என்பதை இக்கட்டுரை நேர்த்தியாக பதிவு செய்கிறது. நாடாளுமன்ற அரசியலே சுயநல மிகளின் அரசியலாகும். ஆற்றல் இருந்தால் புகழ் பதவி. பணம் இவைகளை எளிதில் பெறமுடியும் அந்த நாடாளுமன்றத்தில் மக்களுக் காக இரட்டை வேடம் போடாமல் போராடும் தோழனாக எப்படி மிளிர்ந் தார் என்பதை இத் தொகுப்பு விளக்கு கிறது. முரண்படும் அரசியல் இயக்கங்களை மக்களின் நன்மைக் காக இணைத்து செயல்பட வைப்ப தற்கு இவருக்கிருந்த ஆற்றல் பாராட்டு க்குரியது. தமிழ் நாட்டு இளைஞர்கள் கையிலே இருக்க வேண்டிய கையேடு. அறிவியல் பார்வையோடு அரசி யலையும் பண்பாட்டையும் உயர்த்திட உதவும் உணர்ச்சிமிகு ஆவணம்.
எப்படி மரணிப்பாய்
எம் தோழா (சீத்தாராம் யெச்சூரி நினைவிதழ்)
வெளியீடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,
தமிழ்நாடு மாநிலக்குழு
விலை : ரூ.50