சென்னை,ஜூன் 11- மாநிலம் முழுவதும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் நடத்தும் கிளர்ச்சி பிரச்சாரம் தொடங்கியது.
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில அரசை வலியுறுத்தி இன்று (ஜூன் 11) தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை தொடங்கி உள்ளது.
இதனையொட்டி பிராட்வேயில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தொடங்கி வைத்தார்.